Monday 20 November 2017

17 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இந்திய பெண்ணுக்கு உலக அழகி பட்டம்

டந்த நவம்பர் 18 ஆம் தேதி சீனாவின் சான்யா சிட்டியில், 118 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டு போட்டியிட்ட உலக அழகி போட்டியில் எல்லோரையும் புறந்தள்ளி உலக அழகி பட்டம் வென்றுள்ளார் இந்தியவை சேர்ந்த மானுஷி சில்லார்.



20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். செயின்ட் தாமஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ளார்.  இவரது தாயார், நீலம் சில்லாரும் மருத்துவ படிப்பு படித்து தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை, மித்ர பாசு சில்லார், டிஆர்டிஓ - வில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.



மானுஷி சில்லார் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே விளம்பரங்களில் மாடலாக பணிபுரிந்துள்ளார்,  இதற்கு முன்பு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்றுள்ளார், இந்த வெற்றியே இவருக்கு உலக அழகி போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும், நம்பிக்கையையும் தந்தது.



வெறும் உடல் அழகை மட்டும் வைத்து உலக அழகி பட்டம் கொடுக்கப்படுவதில்லை . இறுதி சுற்றில் போட்டில்யில் கலந்து கொள்ளும் அழகிகளின் அறிவுத்திறனும் சோதிக்கப்படும். இறுதி சுற்றில் ஐந்து நாடுகளின் அழகிகள் களத்தில் இருந்த நிலையில் மானுஷி சில்லாரிடம் போட்டி நடுவர்களால் ஒரு கேள்வி கேட்டனர் . "உலகத்திலேயே அதிக சம்பளம் பெறக் கூடிய வேலை எது? ஏன்?” என்று விளக்கம் தர சொல்லியுள்ளனர்.  

இந்த கேள்விக்கு மானுஷி அளித்த பதில் தான் உலக அழகி பட்டத்தை அவருக்கு வென்று தந்துள்ளது.  "உலகத்திலேயே மிக உயர்வான வேலை அம்மாவாக இருப்பதுதான். தாயாக இருப்பது தான் மிக உயர்ந்த பதவி. தாய்க்கு தான் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை நாம் பணமாக கொடுப்பது அல்ல. அன்பும் மரியாதையுமாக அது கொடுக்கப்படவேண்டும். அப்படித்தான் கொடுத்து கொண்டிருக்கிறோம். எனக்கு என் அம்மா தான் எப்போதும் ஊக்கம் அளிக்கக் கூடியவர், ஒவ்வொரு அம்மாவும் தன் பிள்ளைகளுக்காக வாழ்கையில் எவ்வளவோ விஷயங்களை விட்டு கொடுக்கின்றனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 

இவரது தாயை, தாய்மையை போற்றும் இந்த பதில் போட்டி அரங்கில் இருந்த நடுவர்களை நெகிழ செய்து விட்டது. மானுஷி சில்லாருக்கு உலக அழகி பட்டமும் வென்று தந்து விட்டது. இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு  ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றார், அதன் பின்னர் பிரியங்கா சோப்ரா 2௦௦௦ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆறு முறை இந்தியாவை சேர்த்தவர்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.



இந்த வெற்றி செய்தி கேள்விப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி "வாழ்த்துக்கள் உங்கள் வெற்றியால் இந்தியா பெருமைபடுகிறது" என்று வாழ்த்தியுள்ளார்.


இந்த வெற்றி செய்தி கேள்விப்பட்ட ஹரியானா முதல்வர் விபுல் கோயல் "உங்கள் வெற்றி உலகமெங்கும் வாழும் ஹரியானா மாநில பெண்களை பெருமைப்பட வைத்ததுள்ளது,  உலக அழகி பட்டம் வெல்லும் ஆறாவது இந்தியரான மானுஷி சில்லாருக்கு வாழ்த்துக்கள், உங்களால் நாங்கள் மிகவும் பெருமை அடைந்துள்ளோம்" என்று ட்வீட் செய்துள்ளார். 
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்